ப.சிதம்பரத்தை கைது செய்தது குட் நியூஸாம்.. இந்திராணி முகர்ஜி உற்சாகத்தை பார்த்தீங்களா
மும்பை: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று, இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா, ஊழல் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 21 அன்று சிபிஐயால், தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மீடியா தொழிலதிபர், பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி ஆகியோரும் இணை குற்றவாளிகளாவர். தற்போது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி இருவரும் தங்கள் மகள் ஷீனா போரா கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு நிதி பெற, எஃப்.ஐ.பி.பி.யின் ஒப்புதலைப் பெறுவதற்காக கார்த்தி சிதம்பரம் மற்றும் முகர்ஜி இடையே 1 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக, இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருந்தார்.
உண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்!
இதையடுத்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம், கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்க இயக்குநரகம் பல சந்தர்ப்பங்களில் விசாரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியிலும், கடந்த ஆண்டு டிசம்பர் 19 ம் தேதியும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரித்தது.
இந்த நிலையில், மும்பை நீதிமன்றம் வருகை தந்திருந்த இந்திராணி முகர்ஜி "ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது ஒரு நல்ல செய்தி" என்று கூறினார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.