நான் கிளர்ச்சி செய்யவில்லை.. என்சிபிக்கு மொத்தமாக திருப்பிய அஜித் பவார்.. மௌனம் கலைத்தார்!
நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளிர்ச்சி செய்யவில்லை என்று கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கிளிர்ச்சி செய்யவில்லை என்று கட்சிக்கு திரும்பிய அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. மகாராஷ்டிராவில் என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து பாஜகவிம் தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அம்மாநில முதல்வராக நாளை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். அங்கு பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.

மீண்டும் ஏற்றது
பாஜக கூட்டணியில் இருந்து தன்னுடைய விலகலுக்கு சரியான காரணத்தை அஜித் பவார் சொல்லவில்லை. பர்சனல் காரணங்களால் ஆதரவை வாபஸ் பெறுகிறேன் என்று மட்டும் குறிப்பிட்டார். தற்போது அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத் பவார் குடும்பமும் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மௌனம்
இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது முதல்முறையாக என்சிபியின் மூத்த தலைவர் அஜித் பவார் மௌனம் கலைத்து இருக்கிறார். அதில், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. நான் எப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன்தான் இருக்கிறேன். நான் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யவில்லை.

இனியும் இல்லை
இனியும் கட்சிக்கு எதிராக நான் கிளர்ச்சி செய்ய மாட்டேன் என்று அஜித் பவார் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அஜித் பவாருக்கு முக்கிய அமைச்சரவை பதவி அளிக்கலாம் என்று கூறுகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் பெற போகும் 15 அமைச்சர் பதவியில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள்.

துணை முதல்வர்
சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக இவருக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் கட்சியிலும் அஜித் பாவருக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications