மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதோ.. திலீப் வீட்டு ஹாலில் ஒய்யாரமா படுத்துக் கொண்டிருப்பது யார்னு பார்த்தீங்களா?

விவசாயி வீட்டில் பதுங்கிய சிறுத்தையின் சிசிடிவி காட்சி வைரலாகிறது

Google Oneindia Tamil News

மும்பை: திலீப் வீட்டு ஹாலில் ஒய்யாரமாக படுத்து கொண்டிருப்பது யார் தெரியுதா? இப்போது இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் பிம்பல்கன் ரோடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் திலீப். இவர் ஒரு விவசாயி.. ஒரு நாயை வளர்த்து வருகிறார்.

leopard entered a farmers house near ahmadabad

போன சனிக்கிழமை அந்த நாய் தெருவில் எங்கேயோ போய் கொண்டிருந்தது. அதனை ஒரு சிறுத்தை பார்த்துவிட்டு, பின்னாடியே துரத்த ஆரம்பித்தது. இதனால், அந்த நாயை துரத்தி கொண்டு சிறுத்தை ஓடிவந்தது. நாயோ, திலீப் வீட்டுக்குள் ஓடிவந்து பதுங்கி கொண்டது.

துரத்தி வந்த சிறுத்தையும் திலீப் வீட்டுக்குள் வந்துவிட்டது.. சிறுத்தையை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

திலீப்பின் நாய், வீட்டின் கதவு பின்னாடி நுழைந்து திரும்பவும் வேறு பக்கமாக வெளியே போய்விட்டது.ஆனால் விரட்டிக் கொண்டு வந்த சிறுத்தைக்கோ வழி தெரியவில்லை.. சுற்றிலும் சேர், சோபாக்கள் இருக்கவும், ஹாலிலேயே படுத்து கொண்டது. இதையடுத்து திலீப் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து வந்தனர்.

கிட்டத்தட்ட 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அந்த சிறுத்தைக்கு 4 வயசு ஆகிறதாம்.. இப்போது காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு போய் விட்டுள்ளனர். திலீப் வீட்டு ஹாலில் தங்கிய சிறுத்தையின் வீடியோதான் வைரலாகிறது.

English summary
leopard entered a farmer's house near ahmadabad and this cctv footage has released now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X