மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உறவுகள் போலி".. லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய நடிகை.. மும்பையை உலுக்கும் இன்னொரு தற்கொலை

மும்பையில் டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

மும்பை: "உறவுகள் போலி.. கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது" என்று கடிதம் எழுதிவிட்டு நடிகை ஒருவர் தூக்கு போட்டு தறகொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்.. இதற்காக மும்பையிலேயே தங்கி உள்ளார்.

இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிடவும், அனைத்து ஷூட்டிங்கும் இந்தியா முழுக்க கேன்சல் ஆகிவிட்டது.. இதனால் மும்பை வீட்டில் இருக்க முடியாமல் சொந்த ஊரான இந்தூருக்கு மேத்தா சென்றார். அங்கு சென்றதில் இருந்தே ஒருவித மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

இந்துவின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள்.. இந்து மதப்படி இறுதி சடங்கும் செய்த நெகிழ்ச்சி.. சபாஷ்இந்துவின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம்கள்.. இந்து மதப்படி இறுதி சடங்கும் செய்த நெகிழ்ச்சி.. சபாஷ்

 மன உளைச்சல்

மன உளைச்சல்

ஷூட்டிங் எப்போன்னு தெரியலயே என்று புலம்பியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் மன உளைச்சல் அதிகமாகி தன்னுடைய ரூமிலேயே ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார். மறுநாள்தான் அவர் தூக்கில் தொங்கியது கவனிக்கப்பட்டு, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், மேத்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்.

 விசாரணை

விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஹிராநகர் போலீசார் விசாரணையும் நடத்திவருகிறார்கள்.. அப்போது மேத்தா தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.. அதில் முழுக்க முழுக்க தன்னுடைய எதிர்காலத்தை பற்றி புலம்பியுள்ளார்.. உறவுமுறைகள் குறித்தும் ஏமாற்றத்துடன் சில வரிகளை எழுதி உள்ளார்.

 கனவுகளின் இறப்பு

கனவுகளின் இறப்பு

தற்கொலைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புகூட இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், "கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது" என்று தெரிவித்துள்ளார்.. இந்த பதிவுகள் எல்லாமே அவரது மன அழுத்ததை வெளிப்படுத்தி உள்ளது.. இதையெல்லாம் பார்த்து சக கலைஞர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கனவே இப்படித்தான், கடந்த 15ம் தேதி டிவி நடிகர் மன்மீத் க்ரேவால் தூக்கு போட்டு கொண்டார்.. அவரால் வீட்டு வாடகையை கூட தர முடியாமல் இருந்திருக்கிறார்.. மன அழுத்தத்தினால்தான் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இப்படி லாக்டவுனால் ஷூட்டிங் இல்லாததாலும், வருமானம் இல்லாததாலும் அடுத்தடுத்து நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

English summary
lockdown: serial actress preksha mehta hangs herself to death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X