ஒரு வாரம்தான் டைம்.. இல்லையென்றால் மீண்டும் தேர்தல்.. மகா.வில் அதிரடிக்கு தயாராகும் பாஜக!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவிற்கு ஆதரவா? சோனியாவை சந்தித்த சரத் பவார்.. என்ன பேசினார்கள்?
சந்திப்பு
இந்த நிலையில்தான் இன்று காலை பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இன்று காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா தொடர்ந்து முரண்டு பிடிப்பது குறித்து இதில் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
பாஜக
அதன்படி மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாது. அதனால் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கட்டும். 3 மாதங்களுக்கு பிறகு தேர்தலை சந்திப்போம்.
தேர்தல் எப்படி
அடுத்த முறை தேர்தலை தனியாக சந்திப்போம். இதன் மூலம் மீண்டும் ஆட்சியில் அமர முடியும். சிவசேனா உடன் நாம் கூட்டணி வைத்து இருக்க கூடாது. அதனால் தான் எல்லா பிரச்சனையும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் வருகிறது.
இன்னும் ஒரு வாரம்
பாஜக அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்கும். அதற்குள் ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிதான். அதன்பின் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் என்று கூறுகிறார்கள். பாஜகவின் இந்த முடிவு சிவசேனாவிற்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது.