மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவசேனா தேசியவாத காங். சேர கூடாது.. மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக!

மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு மொத்தமாக பாஜக முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெடியாகும் பாஜக!

    மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு மொத்தமாக பாஜக முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலைதான் பாஜகவிற்கு மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

    சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் உள்ளனர்: சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ரானாசிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் உள்ளனர்: சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ரானா

    முடிவு இல்லை

    முடிவு இல்லை

    இந்த நிலையில் சிவசேனாவுடன் எவ்வளவு பேசியும் பாஜகவால் உடன்படிக்கையை எட்ட முடியவில்லை. சிவசேனாவும் கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை வருடம் எங்களுக்கும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

    இன்னொரு பக்கம் என்ன

    இன்னொரு பக்கம் என்ன

    அதே சமயம் தேசியவாத காங்கிரஸ் இன்னொரு பக்கம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க தயாராகி வருகிறது. அதன்படி சிவசேனாவிற்கு ஆதரவு அளித்து. அவர்களை ஆட்சியில் அமர வைக்கலாம். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூரத்தில் வைக்க இதுவே சரியான வழி என்று தேசியவாத காங்கிரஸ் நினைக்கிறது .

    நூல்விட்டது

    நூல்விட்டது

    இதற்காக சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் இப்போதே நூல் விட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனைக்குள் வரவே இல்லை என்றுதான் கூற வேண்டும். நாங்கள் எதிர்கட்சியாகவே இருந்து கொள்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி மொத்தமாக ஒதுங்கிவிட்டது.

    சிவசேனா எப்படி

    சிவசேனா எப்படி

    இதனால் தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் சேர்வதை தடுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் வர வாய்ப்பில்லை. அதனால் மொத்தமாக அங்கு அரசியல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியாக இருக்கும் என்று பாஜக நினைக்கிறது.

    ஜனாதிபதி ஆட்சி

    ஜனாதிபதி ஆட்சி

    பெரும்பாலும் மகாராஷ்டிராவில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணையும் நிலை ஏற்பட்டால் ஆளுநரை வைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜக காய் நகர்த்தும். சிவசேனாவை ஆட்சியில் அமர பாஜக விடாது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: BJP Leaders plans not to allow NCP and Shiv Sena alliance formation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X