மகாராஷ்டிரா.. ஒரே நாளில் 31,855 பேருக்கு கொரோனா.. தினமும் சராசரியாக 1000 நோயாளிகள் பலியாக வாய்ப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஆக்டிவ் கோவிட் -19 கேஸ்கள் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் 3 லட்சத்தை எட்டக்கூடும் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா பாதித்த மாவட்டமாகியுள்ளது புனே. அந்த மாவட்டத்தில் அதிக அளவில் அதாவது 61,125 என்ற அளவுக்கு தொற்று பதிவாகியுள்ளது.
நாக்பூர் (47,707) மற்றும் மும்பை (32,927) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாக்பூர், தானே மோசம்
இப்படியே, கேஸ் எண்ணிக்கை உயர்ந்தால், பல மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நாக்பூர் மற்றும் தானே ஆகியவை தங்கள் மருத்துவ வசதிகளை அதிகரிக்காவிட்டால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறிவிடலாம்.
அடுத்த 11 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 64,000 க்கு மேல் உயரக்கூடும்.

ஒரு நாளைக்கு 1000 நோயாளிகள் மரணம்
மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் மரண விகிதம், 2.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அங்கு மொத்த கேஸ் எண்ணிக்கை, 28,24,382 என்ற அளவில் உள்ளது. எனவே, 2.27 சதவீதம் என்ற அடிப்படையில், 64,613 கொரோனா நோயாளிகள் இறக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 1000 கொரோனா நோயாளிகள் பலியாகும் வாய்ப்பு உள்ளது என்பதே அர்த்தமாகும். அடுத்த இரண்டு வாரத்திற்கு இப்படித்தான், நிலவரம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

முதல் முறை
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 31,855 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதுவரை அதாவது கடந்த வருடம் கொரோனா பரவியது முதல் இப்படி ஒரே நாளில் இத்தனை அதிகமான கேஸ்கள் பதிவானது இல்லை. ஆனால் கொரோனா ஓய்ந்து விட்டதாக நினைத்த இந்த காலகட்டத்தில் இவ்வளவு அதிக கேஸ் பதிவாகியுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனாதான் இதற்கு காரணம்.

படுக்கை வசதிகள்
கேஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஆக்ஸிஜன் சப்ளை வசதியுடன் கிட்டத்தட்ட 4,000 படுக்கைகள் அந்த மாநிலத்திற்கு தேவைப்படுகிறது. நாக்பூர் மற்றும் தானே மாவட்டங்களில் கொரோனா பெட்கள் ரொம்பவே தேவை என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications