Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக அமோகம்.. மகா. உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா - காங்கிரஸ் பின்னடைவு.. சரத் பவார் - உத்தவ் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பாஜக அநேக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு அடுத்தப்படியா சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கி உள்ளதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 286 நகராட்சி கவுன்சில் மற்றும் 42 நகர பஞ்சாயத்துக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் கூட்டணியின்றி அனைத்து கட்சிகளும் போட்டியிட்டுள்ளன.

maharashtra local body election results

மகாராஷ்டிராவை ஆளும் பாஜக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அதேபோல் இன்னொரு துணை முதல்வரான அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சரத்பவார் அணி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டுள்ளன.

அதேபோல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (உத்தவ் ) அணி, அவரது சகோதரர் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் எனும் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன. மேலும் சுயேச்சைகள் மற்றும் சில சிறிய கட்சியினர் போட்டியிட்டுள்ளனர். சில இடங்களில் மட்டும் பாஜக - சிவசேனா, காங்கிரஸ் - சரத்பவார் அணி - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கூட்டணி அமைத்து உள்ளன.

பெரும்பாலான இடங்களில் கட்சிகள் தனித்து களமிறங்கி உள்ளதால் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களில் கூட்டணியாக இருந்தாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தான் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் தான் முதற்கட்டமாக, கடந்த டிசம்பர் 2ம் தேதி 222 நகர கவுன்சில் மற்றும் 42 பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 67.63 சதவீத ஓட்டுகள் பதிவானது. அதன்பிறகு , 2வது கட்டமாக மீதமுள்ள நகர கவுன்சில் மற்றும் பஞ்சாயத்துக்கு தேர்தல் நடந்தது. 47.04 சதவீத ஓட்டுகள் பதிவானது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 246 நகராட்சி கவுன்சிலில் பாஜக 99 இடங்களில் முன்னிலை வகித்தது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 40 நகராட்சி கவுன்சிலில் முன்னிலையில் இருந்தது.
துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலை வகித்தது.

அதேபோல் காங்கிரஸ் கட்சி 30 நகராட்சி கவுன்சிலில் முன்னிலை வகித்தது.சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி தலா 10 இடங்களில் முன்னிலை வகித்தது. மற்றவர்கள் 25 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல் 42 நகர பஞ்சாயத்துகளில் பாஜக 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 6 இடங்களிலும், சிவசேனாவின் (உத்தவ் அணி), அஜித் பாவராரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலா 3 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் யார் வெல்வார்கள்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+