மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேருக்கு கொரோனா- 81 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இந்தியாவில் மொத்தம் 3,53,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் 10 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,445 ஆக அதிகரித்தது.
யம்மாடியோ.. 62 நாள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8.35 கோடி பில்.. ஷாக்கான அமெரிக்க தாத்தா
மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 81 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,328 பேர் ஏற்கனவே உயிரிழந்தது கணக்கிடப்படாமல் இருந்தது. இதனையும் சேர்த்து அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5537 ஆகவும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் 24 மணிநேரத்தில் 1859 பேருக்கு கொரோனா உறுதியானது. 24 மணிநேரத்தில் டெல்லியில் 93 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44688 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1837 ஆகவும் இருக்கிறது.