மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மராத்தா vs பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் யுத்தம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மராத்தா ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு இடையேயான 'இடஒதுக்கீடு' யுத்தமும் தீவிரமாகி வருகிறது. மகாராஷ்டிரா அரசியல் கட்சிகளுக்கு இந்த இரு ஜாதிகளிடையேயான யுத்தம் மிகப் பெரும் சவாலாகவும் தேர்தல் களத்தில் உருவெடுத்து நிற்கிறது.
மகாராஷ்டிராவில் முன்னேறிய வகுப்பில் உள்ள மராத்தா ஜாதியினர் தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உரிமை கோரி நீண்டகாலம் போராடி வருகின்றனர். இதற்கு இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் விழிபிதுங்கி இருக்கின்றன. மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு வழங்கினாலும் நீதிமன்றங்கள் ரத்து செய்து விடுகின்றன; வேறுவகையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தாலும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் மராத்தா மக்கள் தங்களுக்கான இடஒதுக்கீடு உரிமைக்காக மிகப் பிரம்மாண்டமான, அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியைத் தரக் கூடிய பிரம்மாண்ட போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தற்போது மனோஜ் ஜாரங்கி தலைமையில் மராத்தா ஜாதி மக்கள் ஒருங்கிணைந்து திரண்டு நிற்கின்றனர். மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் தற்போதைய பாஜக கூட்டணி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
அதுவும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மராத்தா - இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளிடையேயான யுத்தம் உக்கிரமாகி வருகிறது. மனோஜ் ஜாரங்கி என்கிற ஒரு தனி மனிதருக்காக எப்படி மகாராஷ்டிரா அரசு வளைந்து போக முடியும்? அதை எப்படி நாங்கள் அனுமதிப்போம் என்கின்றனர் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதி தலைவர்கள். அத்துடன் மராத்தா ஜாதியினருக்கு எங்களுடைய இடஒதுக்கீட்டில் உரிமை இல்லை என அறிவித்தாக வேண்டும் மாநில அரசு எனவும் கெடுவும் விதிக்கின்றனர்.
இத்தகைய ஜாதிகளிடையேயான மோதல், அரசியல் கூட்டணிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை எதிர்கொள்ள மராத்தா மனோஜ் ஜாரங்கிதான் காரணம் என்கிற குமுறல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே இருக்கிறது. இதனால் மராத்தா ஜாதியின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்ற குரலும் வலுக்கிறது.
அதேபோல இந்தியா கூட்டணிக்குள்ளும் இருதரப்புக்கும் ஆதரவான நிலை மையம் கொண்டிருக்கிறது. இரு ஜாதிகளிடையேயான இடஒதுக்கீடு யுத்தம், இரு அரசியல் கூட்டணிகளுக்குள்ளும் மிகப் பெரும் குழப்பத்தையும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு காண முடியும் என்பது தெரியாமல் பாஜக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 'திக்கு தெரியாமல்' விழித்துக் கொண்டிருக்கின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications