மாற்றுத்திறனாளி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 17 பேரின் டிஎன்ஏவை டெஸ்ட் செய்ததில்.. சிக்கிய தந்தை!
மும்பை: காத கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க 17 பேரின் டிஎன்ஏ-வை பரிசோதித்ததில், இளம்பெண்ணின் தந்தையினுடைய டிஎன்ஏ பொருந்தியுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மும்பையின் கஃப் பரேட் பகுதி சேர்ந்த இந்த இளம்பெண், உடல் நல கோளாறு இருப்பதாக தனது பாட்டிக்கு சைகை மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக வயிற்றில் ஏதோ புழு போன்று ஊர்வதாக தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

பரிசோதனையில் இளம் பெண், 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இளம்பெண் மாற்றுத்திறனாளி என்பதால் ஆரம்பத்தில் தகவல் பரிமாற்றத்தில் போலீசாரருக்கு சிக்கல் ஏற்பட்டது. மட்டுமல்லாது, பயம் காரணமாக இளம் பெண் எதையும் கூற முன்வரவில்லை.
தந்தையிடம் இது குறித்து விசாரித்த போது, அவரும் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் காவல்துறை புகார் எதுவும் அளிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து இளம் பெண்ணுக்கு, முறையான ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து இளம்பெண் பேச முன் வந்தார்.
இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் இளம் பெண்ணின் தந்தை உட்பட 17 நபர்களை அடையாளம் கண்டனர். அதில் ஒரு சிறுவனும் அடங்குவார். குற்றவாளிகளை துல்லியமாக கண்டறிய, போலீசார் இளம் பெண்ணின் தந்தை உட்பட 17 சந்தேக நபர்களின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
இளம்பெண்ணின் கருவின் மரபணுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, தந்தையினுடைய மரபணு கருடன் முற்றிலும் பொருந்திப் போனது. இதனையடுத்து காவல்துறையினர் அவரது தந்தையை கைது செய்திருக்கின்றனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications