தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
மும்பை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் அறிவித்துள்ள நக்மா, வீட்டுத்தனிமையில் உள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நடிகையுமான நக்மா, டந்த ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனினும் அவருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. இதை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்."சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு இப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
எல்லாவற்றிலும் தயவுசெய்து கவனமாக இருங்கள். தடுப்பூசியின் 1 வது மருந்தை எடுத்துக் கொண்ட பிறகும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுவிட்டோமே என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என அவரது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, பழம்பெரும் நடிகர் பரேஷ் ராவலும் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். அதை அவர் சமூக ஊடகங்களில் அண்மையில் தெரிவித்தார். இதற்கிடையில், அக்ஷய் குமார், கோவிந்தா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.