நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அலிபாக் பகுதியில் நிசர்கா புயல் கரையை கடந்து வரும் நிலையில் அதனால் வீசப்படும் பலத்த காற்றால் சிக்கிய ஒரு கப்பல் மிர்யா கடற்கரையில் ஆட்டம் கண்டுள்ளது.
Recommended Video
அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் தற்போது 1 மணிக்கு ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையைக் கடக்கத் தொடங்கிவிட்டது.
இந்த புயலால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் வைரலாகும் ட்வீட்டுகளை காண்போம்.
9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ
|
கப்பல்
நிசர்கா புயலால் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் மிர்யா கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது. கப்பலும் தத்தளிக்கிறது.
|
திசை மாறுகிறது
அலிபாக், மாண்டவா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புயல் அவ்வப்போது திசையை மாற்றிக் கொள்கிறது.
|
பலத்த காற்று
நிசர்கா புயல் கப்பலையே கவிழ்க்கும் அளவுக்கு காற்று பலமாக வீசி வருகிறது.
|
பயங்கர காற்று
நிசர்கா புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது பேய்க்காற்று வீசி வருகிறது. பயங்கர காற்றால் மரங்கள், செடி போல் வளைந்து ஆடுகின்றன.
|
ரப்பர் போல் வளைந்த மரம்
நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் சிந்துதுர்கா மாவட்டத்தில் ரப்பர் போல் வளைந்து ஆடும் தென்னை மரம்.
|
வேரோடு சாய்ந்த மரம்
நிசர்கா புயலால் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள காட்சி.