ஒரு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறிய நிசர்கா.. எப்படி? புயல் குறித்த பரபரப்பு தகவல்கள்
மும்பை: நிசர்கா புயலாக மாறிய ஒரு மணி நேரத்திலேயே தீவிர புயலாக மாறியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
Recommended Video
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது இதற்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.
இது இன்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் மகாராஷ்டிரா- குஜராத் மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும் அந்த மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மழை
இந்த நிலையில் இந்த புயலால் நேற்று கோவாவில் 74 மி.மீ. மழை பெய்துள்ளது. ரத்னகிரியில் 20 மி.மீ. மழையும் ஹர்னாயில் 13 மி.மீ. மழையும், கோலபாவில் 37 மி.மீ மழையும் பதிவானது. நிசர்காவின் கண் தற்போது ரேடாரில் தெரிகிறது. மகாராஷ்டிரா கடலோரத்தை சுற்றி மேகக் கூட்டங்கள் உள்ளன. அப்பகுதியில் மழை பொழிவு கணிசமாக உயர்கிறது.

சாதகமான சூழல்
இந்த புயலின் கண் விட்டம் 65 கி.மீ. ஆக இருந்தது ரேடார் மூலம் தெரியவந்தது. ஆனால் அந்த விட்டம் தற்போது ஒரு மணி நேரத்தில் குறைந்துள்ளது. இதனால் புயல் தீவிரமானதை காட்டுகிறது. இதனால் காற்றின் வேகமும் மணிக்கு 85 முதல் 95 கி.மீ. வேகத்திலிருந்து 90 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. இதன் மூலம் புயல் தீவிரமானதற்கான சாதகமான சூழல்கள் உள்ளதை அறியலாம்.
|
தீவிர புயல்
கடல் பரப்பில் உள்ள அதிக வெப்பத்தாலும் செங்குத்தான காற்றாலும் புயல் தீவிர புயலாக உருவாக உதவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிசர்காவை எதிர்கொள்ள இந்திய விமான படையின் விமானங்கள் தயார் நிலையில் உள்ளது. அவை சூரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவிலிருந்தும் 5 தேசிய பேரிடர் மீட்பு துறையினர் மும்பைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காற்று
மகாராஷ்டிராவின் கடலோரத்தில் ராய்காட் மாவட்டத்தில் அலிபவுக்கில் இன்று மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவை புயல் சுழற்றி அடிக்கும் என்பதால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் வெர்சோவா கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications