Plane crash: அஜித் பவார் பயணித்த விமானம் வெடித்தது எப்படி? வெளியான திக் திக் திக் சிசிடிவி!
மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்கின்றன. சரியாக 8.46 மணிக்கு நேற்றைய தினம் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தனது சொந்த ஊரான பாராமதிக்கு துணை முதல்வர் அஜித் பவார் விமானத்தில் நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டார்.

அவருடன் ஒரு விமானி, பாதுகாவலர், உதவியாளர் இருவர் என 5 பேர் அந்த விமானத்தில் இருந்தனர். அப்போது சரியாக 8.46 மணிக்கு விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
விமானி தகவல்
இதனால் விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது விமானத்தை தரையிறக்க முயற்சித்த போதும் அது முடியாததால் Go around எனப்படும் மீண்டும் மேலே எழும்பி வட்டமடித்து மீண்டும் தரையிறங்கும் முயற்சி நடந்தது.
ஓடுதளம் தெரிகிறதா
அப்போது அந்த விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இந்த நிலையில் விமானியிடம், ஏடிசி அதிகாரிகள் பாராமதி ஓடுதளம் தெரிகிறதா என கேட்டனராம். அதற்கு அவர் முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் தெரிவதாகவும் கூறினாராம்.
தரையிறக்கும் முயற்சி
இந்த நிலையில் அவர் விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது திடீரென ஓடுதளத்தில் விமானம் மோதியதில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் தீ விமானம் முழுவதும் பரவி அதில் பயணித்த அஜித் பவார் உள்ளிட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அடையாளம் காட்டுவதில் சிக்கல்
இந்த நிலையில் அவர்களின் உடல்களை அடையாளம் காட்டுவதில் கூட சிக்கல் எழுந்துள்ளது. எனினும் அஜித் பவாரின் கை கடிகாரத்தை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான புலனாய்வுத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
லியர்ஜெட் 45
அவர் பயணித்த லியர்ஜெட் 45 விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நெடுஞ்சாலையில் இருந்த ஒரு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
தீப்பிடித்த விமானம்
அஜித் பவார், மேலும் 4 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், சரியாக 8.46 மணிக்கு தரையிறங்க முடியாமல் தவித்து கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த சம்பவம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேரில் பார்த்த பெண்
இந்த விபத்தை நேரில் பார்த்த ஒரு பெண் கூறுகையில், "விமானம் பாராமதி ஓடுதளத்தில் தரையிறங்கும் போது 2, 3 முறை தடுமாறியது. விமானம் மீண்டும் மேலே பறந்தது. இதையடுத்து மீண்டும் தரையிறங்கிய போது ஓடுதள தரையில் மோதி தீப்பிடித்தது. அப்போது 3 முறை வெடி சப்தமும் கேட்டது" என அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த விமான விபத்திற்கு என்ன காரணம் என்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் "விமான விபத்தில் எந்த சதியும் இல்லை, எனவே யாரும் அஜித் பவார் விமான விபத்தை அரசியலாக்க வேண்டாம்" என அஜித் பவாரின் சித்தப்பா சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications