Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் வாங்கி ஏமாற்றிய இளம்பெண்.. அலுவலக வளாகத்திலேயே சக ஊழியர் செய்த காரியம்.. புனேவில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனேவில் கடன் பிரச்சினையில் இளம்பெண் ஊழியர் ஒருவரை அலுவலக வளாகத்தில் வைத்தே சக ஊழியர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது. சக ஊழியர்கள் ஒருவர் கூட தடுக்க முன்வராமல் செல்போனில் படம் எடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் யெரவடா பகுதியில் விஎன்எஸ் குளோபல் என்ற பிபிஓ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுப்ஹதா கடோரா (வயது 28) என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியரான கிருஷ்ணா கனோஜா (30)விடம் பணம் கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

pune-woman-stabbed-multiple-times-succumbed-to-injuries-in-hospital-over-a-financial-dispute

தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி பலமுறை கடன் வாங்கினாராம் சுப்ஹதா. ஒரு கட்டத்தில், தான் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கிருஷ்ணா கனோஜா கேட்டுள்ளார். ஆனால், தனது தந்தைக்கு இன்னும் உடல் நிலை சரியாகவில்லை எனவும் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் பணம் தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால், சுப்ஹதாவின் சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ணா, உண்மையிலேயே அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லையா? அல்லது பொய் கூறுகிறாரா? என்று பார்க்க சென்றுள்ளார். இதில், தந்தை நலமாக இருப்பதாகவும் சுப்ஹதா பொய்யான காரணங்களை கூறி பணத்தை கடனாக வாங்கியதையும் கண்டுபிடித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், சுப்ரஹதாவை அலுவலகத்தின் பார்க்கிங் பகுதிக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார்.

pune-woman-stabbed-multiple-times-succumbed-to-injuries-in-hospital-over-a-financial-dispute

அங்கு வந்ததும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சுப்ஹதா பணம் கொடுக்க மறுத்து இருக்கிறார். இதனால் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சுப்ஹதாவை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இந்த கொலை வெறி தாக்குதலை அங்கு நின்று கொண்டிருந்த சக ஊழியர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளனர்.

யாருமே தடுக்க முன்வரவில்லை. இந்த கொடூர சம்பவத்தை சிலர் செல்போனில் படம் எடுத்துள்ளனர். கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த சுப்ரஹதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணா கனோஜாவை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+