ரூ 250 கோடியில் சொகுசு வீடு.. மகள் பெயரில் எழுதி வைக்கும் ரன்பீர் கபூர்.. பணக்கார குழந்தையாகும் ராஹா
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது ரூ 250 கோடி மதிப்பிலான பங்களாவை தனது மகள் ராஹா பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ராஹா கபூர் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கெனவே ரன்பீருக்கும் ஆலியாவுக்கு பாந்த்ராவில் 4 பிளாட்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ 60 கோடியாகும். இந்த நிலையில் ஷாரூக் கான், அமிதாப் பச்சனின் வீடுகளை போல் ஒரு சொகுசு வீட்டை கட்ட வேண்டும் என ரன்பீர் கபூருக்கு ஆசை இருக்கிறது.
இந்த நிலையில் மும்பையில் பாந்த்ராவில் தனது தாய், தந்தைக்குச் சொந்தமான ஒரு இடத்தில்தான் ரன்பீர் கபூர் வீடு கட்டி வருகிறார். சுமார் 250 கோடி மதிப்பில் கட்டி வருகிறார். அதற்கு ராஹாவின் பெயர் சூட்டவும் ரன்பீர் முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் அந்த வீட்டை தனது மகளின் பெயரில் எழுதி வைக்கவும் ரன்பீர்- ஆலியா தம்பதி முடிவு செய்துள்ளனராம்.
இதற்காக தனது தாய், தந்தை பெயரில் இருக்கும் நிலத்தின் பெயரை தனது குழந்தையின் பெயருக்கு மாற்ற போகிறாராம். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் இந்தியாவில் பணக்கார பாலிவுட் குழந்தை ராஹா கபூராகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள். ராஹாவின் பாட்டி நீது கபூர்தான் அந்த இடத்தின் உரிமையாளராவார்.
தனது கணவரும் மறைந்த நடிகருமான ரிஷி கபூரின் அனைத்து சொத்துகளுக்கும் நீது இணை உரிமையாளர் ஆவார். ஏற்கெனவே நீது பெயரில் ரூ 15 கோடி ஆரம்பரமான வீடு உள்ளது. வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் நீது கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட், குழந்தை ராஹா ஆகியோர் ஒரே வீட்டில் தங்கி கபூர் குடும்பத்தினர் ஆவர்.
இந்த நிலையில் ரூ 250 கோடியில் பங்களா மட்டுமில்லாமல் ரூ 8 கோடியில் ஸ்வான்கி ரக காரையும் ரன்பீர் வாங்கியுள்ளார். அந்த காரில் ரன்பீர்- ஆலியா பட் வலம் வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன. ரன்பீர் கபூர் ராமாயணா மற்றும் அனிமல் பார்க் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், ஜிக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications