ஆன்லைன், டிஜிட்டல் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த புது திட்டம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
மும்பை: டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கும், வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும், மத்திய பேமென்ட் மோசடி பதிவேட்டை, உருவாக்க உள்ளதாக, ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், "நிதி மோசடியை குறைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், விரைவான மற்றும் முறையான பதில்களை உறுதி செய்வதற்கும், நிதி மோசடி பதிவேட்டை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

பேமென்ட் சேவை வழங்குவோருக்கு இந்த பதிவேட்டுக்கான ஆக்சஸ் வழங்கப்படும். அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருங்கிணைந்த மோசடி டேட்டா விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது விரிவான தகவல்கள் அக்டோபரில் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் பணம் செலுத்துதல் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
தற்போது, அனைத்து வகை வங்கி மோசடிகளையும் ரிசர்வ் வங்கியின், மத்திய மோசடி கண்காணிப்புப் பிரிவுக்கு அறிக்கையாக வழங்க, வங்கிகளுக்கு ஒரு வழிமுறை உள்ளது. இப்போது அறிவிக்கப்படும் ரிஜிஸ்டரி என்பது, அனைத்து பேமென்ட் ஆபரேட்டர்களுக்கும் இந்த வசதியை நீட்டிக்கக்கூடும்.
டிஜிட்டல் பேமென்ட், கட்டணம் செலுத்துதல் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், மோசடி ஆபத்து கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது என்று சக்தி காந்த தாஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.
நந்தன் நிலேகனி கமிட்டி அறிக்கை மற்றும் 2019 முதல் 2021 வரையிலான ரிசர்வ் வங்கியின் பேமென்ட்ஸ் விஷன் ஆவணம் ஆகியவை, மத்திய மோசடி பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications