பெங்களூரு தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அதிரடி தடை.. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு
மும்பை: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி என்ற தனியார் வங்கிக்கு மோசடி புகார் காரணமாக ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
அண்மைக்காலமாக வங்கிகள் மோசடி புகார் காரணமாக சிக்குவதும், ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் செயல்படும் பிஎம்சி வங்கிக்கு தடை விதித்து. அதன்பிறகு இரண்டு பெரிய தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால் தடை விதிக்கவில்லை.
இந்நிலையில் இப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த வங்கி ஜனவரி 10ம் தேதி முதல் அடுத்த 6 மாதத்திற்கு புதிததாக டெபாசிட்டுகளை பெறவோ, பணத்தை மொத்தமாக வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்த எடுக்க அனுமதிக்கவோ கூடாது.

கடன் வழங்க தடை
இதேபோல் கடன் வழங்குதல், முதலீடு செய்வது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகள் எதிலும் அடுத்த 6 மாதத்திற்கு ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி ஈடுபடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பணம் எடுக்க கட்டுப்பாடு
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு 35000 ரூபாய்க்கு மேல் எடுக்க எடுக்க தடை விதித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒழுங்குமுறை சட்டம்
ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35 ஏ மற்றும் 56 பிரிவுகளின் கீழ் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

எதுவும் செய்யக்கூடாது
ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹரா வங்கி அதன் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் விவகாரத்தில் , ஜனவரி 2, 2020 அன்று அறிவுறுத்தப்பட்டதைத் தவிர்த்து, அதன் சொத்துக்களை விற்கவோ, இடமாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது" என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
-
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications