Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் எதை திருடிச் சென்றார்? கரீனா கபூர் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சைஃப் அலி கான் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் எதையும் திருடிச் செல்லவில்லை என அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரீனா கபூர், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: தாக்குதல் நடத்தியவர் ஆக்ரோஷமாக இருந்தார். அவர் சைஃப்பை மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டே இருந்தார். எங்களுக்கு சைஃப்பை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில்தான் கவனம் இருந்தது.

saif ali khan mumbai

இதனிடையே அந்த நபர் தப்பியோடிவிட்டார். அவர் எங்கள் வீட்டில் இருந்து எதையும் திருடிச் செல்லவில்லை என கரீனா கபூர் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், தனது மனைவி கரீனா கபூர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு கடந்த 16ஆம் தேதி அதிகாலை வந்த மர்ம நபர் திருட முயற்சித்த போது அவரை சைஃப் அலிகான் தடுத்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர் சைஃப்பை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சைஃப்பை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில் அவரை பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+