சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்.. பட்டையை கிளப்பும் பங்குச் சந்தை
மும்பை: சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்து அசத்தியுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், 40,434.83 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்.
முந்தைய வர்த்தக நாள் முடிவை ஒப்பிட்டால், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 250 புள்ளிகள் உயர்ந்தது. வெளிநாட்டு நிதி வலுவான வருகை, கார்ப்பரேட் வரி குறைப்புக்குப் பிறகு இந்த பாசிட்டிவ் சமிக்ஞையை பங்குச் சந்தை தர ஆரம்பித்துள்ளது என்கிறார்கள், வர்த்தக துறை வல்லுநர்கள்.

அமெரிக்கா, சீனா ஒத்துழைப்பு, காரணமாகவும், உலகளாவிய சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. காலை 9.27 மணிக்கு, சென்செக்ஸ் 216.40 புள்ளிகள் அல்லது 0.54 சதவீதம் அதிகரித்து 40,381.43 புள்ளிகளாக இருந்தது சென்செக்ஸ். பிறகு அதிகபட்சமாக 40,434.83 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டியும் 81.70 புள்ளிகள் அதிகரித்து 11,972.30 ஆக உயர்ந்தது. இது 52 வார உயர்வான 12,103.05லிருந்து சற்று குறைவாகும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பும், ஒரு மாத உயர்வான 70.55 ஆக உள்ளது.
மெட்டல் பங்குகள், டாடா ஸ்டீல் மற்றும் வேதாந்தா 4% க்கும் அதிகமாக உயர்வை சந்தித்தன. அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையும் உலோகப் பங்குகளை உயர்த்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications