சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் உள்ளனர்: சுயேட்சை எம்.எல்.ஏ. ரவி ரானா
மும்பை: சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ரவி ரானா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி ரானா கூறியதாவது:
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றதற்கு காரணமே பாஜகவுடனான கூட்டணிதான். இல்லையெனில் 25 இடங்களில்தான் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கும்.

தற்போதும் சிவசேனாவின் 25 எம்.எல்.ஏக்கள் என்னுடனும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடனும் தொடர்பில் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் அமருவது என சிவசேனா முடிவெடுத்துவிட்டால் அந்த 25 எம்.எல்.ஏக்களும் பட்னாவிஸ் தலைமையிலான அரசில் இணைவார்கள்.
வாக்காளர்கள் தெளிவான தீர்ப்பை தந்தும் சிவசேனாதான் முட்டுக்கட்டை போடுகிறது. இது மகாராஷ்டிரா மக்களை அவமதிப்பதாகும். மகாராஷ்டிரா முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்ற பின்னர் ஓரிரு மாதங்களில் சிவசேனாவின் 20 முதல் 25 எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம்தான் வருவார்கள்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உத்தவ் தாக்கரேதான். ஆகையால் அவர்தான் எந்த விவகாரத்தையும் பேச வேண்டும்.. சஞ்சய் ராவத் பேசக் கூடாது. இவ்வாறு ரவி ரானா கூறினார்.












Click it and Unblock the Notifications