பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.. ஆனால் இன்னும் மோசம் அடையவில்லை.. நிர்மலா சீதாராமன் பேச்சு!
பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது, ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை: பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்போதே ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நிதி நெருக்கடி குறித்தும், பொருளாதார மந்த நிலையில் குறித்தும் இன்று லோக்சபாவில் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பினார்கள்.
இளைஞர்கள் பலர் வேலையை இழக்கிறார்கள், ஜிஎஸ்டி மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, ஆர்பிஐயிடம் இருந்து மத்திய அரசு அவசரமாக பணம் வேறு வாங்கி இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நிதி நிலையை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்கு போதுமான உதவிகளை பெற்று வருகிறோம்.
பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை. பொருளாதார பின்னடைவு என்னும் நிலை உருவாகவில்லை. அது இனியும் உருவாகாது. இந்தியாவின் ஜிடிபி நன்றாகவே இருக்கிறது.
இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்தது. 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% ஆக உள்ளது. இதனால் ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். வேலைவாய்ப்பு போதுமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications