Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளை குர்தாவில் ரத்த காயத்துடன் ஆட்டோவில் ஏறிய சைஃப் அலிகான் முதலில் கேட்டது என்ன? டிரைவர் தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதை அடுத்து அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சைஃப் முதலில் என்ன கேட்டார் என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சைஃப் அலி கானின் மும்பை பாந்த்ரா வீட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சித்ததுடன், அதை தடுத்த சைஃப் அலியை 6 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

saif ali khan


மொத்தம் 12 மாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் சைஃப்புக்கு 4 மாடிகள் சொந்தமானது என தெரிகிறது. அந்த வீட்டில் பாதுகாவலர்கள், சிசிடிவி கேமராக்களை தாண்டி ஒருவர் கடந்த 16 ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்கு அதிகாலை 2.30 மணிக்கு வந்துள்ளார்.

ஏதோ சப்தம் கேட்டதை அடுத்து அவரது அலறலை கேட்டு சைஃப் அலிகான் வந்து அந்த மர்ம நபரை தடுக்க முயன்ற போது அவர் சைஃப்பையும் பணியாளரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் சைஃப்பிற்கு 6 முறை அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

அதிலும் முதுகுதண்டில் காயமேற்பட்டுள்ளது. ரத்தம் கொட்டியதை அடுத்து சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவருடைய கார் தயாராகவில்லை. இதனால் அவருடைய மகன் இப்ராஹிம் அலி கான் ஆட்டோவில் தனது தந்தையை அழைத்துக் கொண்டு லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்தனர். சைஃப்பை கத்தியால் குத்திவிட்டு தனது உடையையும் அந்த மர்ம நபர் மாற்றிவிட்டுச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

6 ஆவது மாடியில் இருந்த கேமராவில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் சைஃப் அலிகான் வீட்டு பணியாளருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

எந்த கேமராவிலும் அந்த நபர் சிக்காமல் சைஃப் அலிகான் வீட்டிற்கு செல்ல அவரது வீட்டு பணியாளர்கள் யாராவது உதவியிருக்க வேண்டும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சைஃப் அலிகான் உயிர் பிழைத்தது, காருக்காக காத்திருக்காமல் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததே முக்கிய காரணம் என்கிறார்கள்.

அந்த வகையில் சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர், சில உருக்கமான தகவல்களை ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் சைஃப் அலிகான் வீட்டு வழியாக சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பெண் ஆட்டோவை நிறுத்தும் படி கூறினார்.

நானோ வேறு ஏதோ பிரச்சினை என நினைத்தேன். அப்போதுதான் சைஃப் அலிகானை வீட்டிற்குள் இருந்து ரத்தக் காயங்களுடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவருடன் ஒரு குழந்தையும் இருந்தது. சைஃப் அலிகான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுமே "மருத்துவமனைக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்" என கேட்டார்.

நான் 10 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம் என கூறி அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டோம். அவரது கழுத்து, முதுகு பகுதிகளில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த வெள்ளை குர்தாவே சிவப்பு நிறத்தில் இருந்தது. பின்னர் அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு எந்த கட்டணத்தையும் வாங்காமல் வந்துவிட்டேன். இவ்வாறு அந்த ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+