19 வயசு கவுசல்யா.. காதலனுடன் ஜூட்.. விஷத்தை குடித்து உயிரை விட்ட 35 வயசு புதுமாப்பிள்ளை பாக்யராஜ்
நாகை அருகே மனைவி காதலனுடன் ஓடியதால் கணவன் தற்கொலை செய்தார்
நாகை: மனைவி தன்னை விட்டு இன்னொருவருடன் ஓடிவிட்டதால், புது மாப்பிள்ளை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள பகுதியை சேர்ந்த விவசாயி பாக்யராஜ். இவருக்கு 35 வயதாகிறது. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.

ஆனால் கல்யாணத்துக்கு முன்பே கவுசல்யாவும், வேறு ஒரு இளைஞரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் லவ் மேட்டர் வீட்டில் தெரியவும், கவுசல்யாவுக்கு வேறு இடத்தில் அவசர அவசரமாக பாக்யராஜ் என்ற மாப்பிள்ளையை பார்த்து கட்டிவைக்க முயன்றனர்.
கவுசல்யா எவ்வளவோ சொல்லி பார்த்தும், வீட்டில் காதலுக்கு பெற்றோர் ஒத்து கொள்ளவில்லை. பாக்யராஜை பிடிக்கவில்லை என்று சொல்லியும் பெற்றோர் கேட்கவில்லை. இதையடுத்து கட்டாயமாக திருமணத்தை செய்து வைத்தனர்.
இந்த நேரத்தில் ஆடி மாசம் ஆரம்பித்ததும், மாப்பிள்ளை வீட்டில் இருந்து கவுசல்யாவை அம்மா வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் கவுசல்யா காதலனை சந்தித்து பேசி அழுதுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்து, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டே ஓடி விட்டனர்.
கட்டின மனைவி காதலனுடன் ஓடிப்போனதை அறிந்த பாக்யராஜ் மிகுந்த வேதனையும் அவமானமும் அடைந்தார். அதனால் வயலில் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications