சுனாமிக்கு பின் பெரிய பேரிடர்.. நாகை, அதிராம்பட்டினத்தை சூறையாடிய கஜா புயல்.. பெரும் சேதம்!
2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நாகை: 2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் நாகை மற்றும் அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் மொத்த தமிழகத்தையே முடக்கி போட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.
எதிர்பார்க்கவில்லை
இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளை அதிகம் தாக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்களை அதிகம் தாக்கியது. கடைசி நேரத்தில் திசை மாறிய கஜா புயல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
மோசமான நாகை
நாகப்பட்டினத்தில் இந்த கஜா புயல் 108 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் பெரும்பாலான மரங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. புராதன கட்டிடங்கள், வீடுகள் நிறைய இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மழை வேறு பெய்த காரணத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பாதிப்பு
இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது அதிராம்பட்டினமும் வேதாரண்யமும்தான். அதிராம்பட்டினத்தில் இன்று காலை 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு இருக்கும் பெரிய கட்டிடங்கள், குடிசைகள், பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
|
சுனாமியை போல பாதிப்பு
கஜா புயல் 2004 சுனாமிக்கு அடுத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வானிலை மைய அதிகாரிகள் அங்கு இன்னும் மழை பெய்யும் என்று வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.