சுனாமிக்கு பின் பெரிய பேரிடர்.. நாகை, அதிராம்பட்டினத்தை சூறையாடிய கஜா புயல்.. பெரும் சேதம்!
2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

நாகை: 2004 சுனாமிக்கு அடுத்து கஜா புயல் நாகை மற்றும் அதிராம்பட்டினத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் மொத்த தமிழகத்தையே முடக்கி போட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது.

எதிர்பார்க்கவில்லை
இந்த புயல் பாம்பன் மற்றும் கடலூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளை அதிகம் தாக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்களை அதிகம் தாக்கியது. கடைசி நேரத்தில் திசை மாறிய கஜா புயல், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.

மோசமான நாகை
நாகப்பட்டினத்தில் இந்த கஜா புயல் 108 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் பெரும்பாலான மரங்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. புராதன கட்டிடங்கள், வீடுகள் நிறைய இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மழை வேறு பெய்த காரணத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பாதிப்பு
இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது அதிராம்பட்டினமும் வேதாரண்யமும்தான். அதிராம்பட்டினத்தில் இன்று காலை 111 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்கு இருக்கும் பெரிய கட்டிடங்கள், குடிசைகள், பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
|
சுனாமியை போல பாதிப்பு
கஜா புயல் 2004 சுனாமிக்கு அடுத்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வானிலை மைய அதிகாரிகள் அங்கு இன்னும் மழை பெய்யும் என்று வேறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications