நாகை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை… மக்கள் மகிழ்ச்சி
நாகை: நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

இந்தநிலையில், இன்று காலை நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளான பாபா கோவில், செல்லூர், கருவேலங்கடை, வடலூரில் மிதமான மழை பெய்தது.
Also Read | மண்டையைப் பிளக்கும் வெயிலின் இடையில்... மழை பெய்ய வாய்ப்பு
கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .
மேலும், கத்திரி வெயிலுக்கு முன்பே சதம் போடும், வெயிலின் இடைவேளையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications