வேதாரண்யம் தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. ஏன் என்ன ஆச்சு! மழைக் காலமும் இல்லையே!
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் கோயில். இது சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட பூமி என்கிறார்கள். தேவாரடியார்கள் மூவரும் பாடிய திருத்தலம் என்ற பெருமைகளும் உண்டு.

4 வேதங்களும் காடுகளாக இருந்து சிவ வழிபாட்டை செய்த தலம் என்பதால் இதற்கு வேதாரண்யம் என்றும் (ஆரண்யம் என்றால் காடு) திருமறைக்காடு என்றும் பெயர் உண்டு. இந்த கோயிலில் ஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மா, விஸ்வாமித்திரர், அகத்தியர் உள்ளிட்டோர் உள்ளர்.
ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்த தலமும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீதியாகராஜர் சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. எனவே இன்றைய தினம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications