விடிய விடிய கொட்டிய மழை! வயல்களை சூழ்ந்த நீர்! வேட்டியை மடித்துக் கட்டி களமிறங்கிய தமிமுன் அன்சாரி!
நாகை: நாகை மாவட்டத்தில் நேற்றிரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதோடு நெற்பயிர்களும் நாசமாகின.
பாதிக்கப்பட்ட வயல்களில் வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கிய நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகளும், வேளாண் துறை அதிகாரிகளும் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது; ''அக்டோபர் இறுதியில் தொடங்க வேண்டிய வட கிழக்கு பருவ மழை , 25 நாட்கள் தாமதமாக தொடங்கி உள்ளது. நேற்று இரவு முதல் நாகை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வயல்களில் நீர் சூழ்ந்து விட்டது. நாகை செல்லூர் பகுதியில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வயலில் இறங்கி பார்வையிட்டேன்.''
''நேற்று இரவு தொடங்கி 200 மில்லி மீட்டரை கடந்து மழை கொட்டியுள்ளது. 80 மில்லி மீட்டர் மழை பெய்தாலே இப்பகுதியில் வயல்கள் பாதிக்கப்படும்.
மேட்டூர் அணை திறக்கப்படாததால், தண்ணீரின்றி பயிர்கள் வளரவில்லை. நேரடி நெல் விதைப்பு மூலம் பயிரிட்ட பயிர்கள் போதிய அளவில் வளராததால், ஒரு நாள் மழையில் அவை மூழ்கி விட்டன.''
''வேளாண்துறை சார்ந்த அதிகாரிகள் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் அவர் கூறுகையில், சம்பா சாகுபடிக்கான இன்சூரன்ஸ் செலுத்திட இன்று கடைசி நாள் ஆகும்.
ஆனால் தீபாவளி மற்றும் மழை காரணமாக விவசாயிகள் பணம் செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு கூடுதல் அவகாசம் தர வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை/ வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிர் சேதங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியையும் அரசு விரைவுப்படுத்தவுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications