திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா?.. ஏன் மோடி செய்தால் பரவாதா?.. உதயநிதி
நாகை: திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா, ஏன் மோடி பரப்புரை செய்தால் அது பரவாதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். சுமார் 100 நாட்கள் இந்த பிரசாரத்தை அவர் நடத்தவுள்ளார். இந்த நிலையில் திருக்குவளையில் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு நாகையில் ஒரு மேடையில் உதயநிதி பேச தொடங்கினார்.
அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பிரசாரத்திற்கு அனுமதி மறுத்து உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து விட்டு நேற்று மாலை விடுவித்தனர்.

பீகார்
அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் திமுக பரப்புரை செய்தால் மட்டும்தான் கொரோனா பரவல் குறித்து அரசுக்கு தெரியுமா? பீகாரில் மோடி, அமித்ஷா பரப்புரை நடத்தினர்; தீபாவளிக்கு கூட்டம் கூடியது ; அப்போதெல்லாம் பரவாதா ?

மிரட்டல்
திட்டமிட்டபடி வரும் மே மாதம் வரை 100 நாட்களுக்கு பிரசாரத்தை நடத்துவேன். தமிழக முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டி பிரசாரங்களை நடத்தி வருகிறார். அதை யாருமே கண்டு கொள்வதில்லை. ஆனால் என்னை மிரட்டுகிறார்கள்.

சீமான் கருத்து
திமுக தலைமை முடிவு செய்யும் இடத்தில் நான் போட்டியிடுவேன். அதிமுக ஆட்சியே ஊழல் ஆட்சி. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும் சீமான் கூறுகிறார்.

மக்கள் முடிவு
இதுவும் அவரது சொந்த கருத்து. யார் வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியுடன் புதிதாக கட்சிகள் சேர்வதும், ஏற்கனவே இருக்கும் கட்சிகள் விலகுவது குறித்தும் தலைமை கழகம் முடிவு செய்யும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications