வாவ் சபாஷ்.. நம் கையே நமக்குதவி.. புயலில் வீழ்ந்த மரங்களை தாங்களே அகற்றும் இளைஞர்கள்!
சீரமைப்பு பணிகளில் இளைஞர்கள், மாணவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
Recommended Video

நாகை: பார்த்தார்கள் இளைஞர்கள்... நம் மக்களுக்கு இனி நாம்தான் என முடிவு செய்து மீட்பு பணியில் இறங்கி விட்டார்கள்.
தமிழகமெங்கும் கஜா புயல் மிரட்டி எடுத்து விட்டது. இதனால் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக அவஸ்தைபட்டு வருகிறார்கள்.
புயலால் வெகுவாக பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம்தான். எங்கு பார்த்தாலும் மழைநீர், வீசிக் கொண்டே இருக்கும் பலத்த காற்று, பெய்து கொண்டே இருக்கும் மழை, கரண்ட் கிடையாது, வெளியில் வர முடியாது, எங்காவது போகலாம் என்றால் ரோடு முழுக்க விழுந்து கிடக்கும் மரங்கள், கரண்ட் கம்பங்கள்.. என எல்லா பக்கம் முடக்கம்தான்!!

பாதுகாப்பு
மாவட்ட நிர்வாகம் இது குறித்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளித்து வருகிறது. பாதிப்புக்குள்ளான மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
|
சீர்செய்யும் பணி
என்றாலும் நாகை மாவட்டம் மணக்குடி இளைஞர்கள், தாங்களாகவே களத்தில் குதித்து விட்டனர். தங்கள் பகுதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், கரண்ட் கம்பங்கள் போன்றவற்றை சீர் செய்யும் பணியில் இறங்கி விட்டனர்.

ஆளாளுக்கு அரிவாள்
ஆளாளுக்கு கையில் அரிவாள்களை தூக்கி கொண்டு, விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மும்முரமாக உள்ளனர். எல்லாருமே இளைஞர்கள்தான்.. சரிசெய்யும் பணிகளை செய்யுங்கள் என்று யாரும் இவர்களுக்கு உத்தரவிடவில்லை, வேண்டுகோளும் விடவில்லை.. தாங்களாகவே வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து கொண்டு தெருவில் இறங்கி விட்டனர்.

மகிழ்ச்சியில் மக்கள்
மின்கம்பங்களை ஓரங்கட்ட தொடங்கி விட்டனர். இளைஞர்களை பார்த்ததும் மாணவர்கள் மற்றொரு பக்கம் படையெடுத்து விட்டார்கள். இளைஞர்களும், மாணவர்களும் மணக்குடியில் கள வேலையில் ஈடுபட்டு வருவதை பார்த்த அந்த பகுதி மக்கள் மழை தந்த இன்னலையும் தாண்டி மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications