2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்… சொல்லி அடிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதிகள் 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைத்த ஒரே தொகுதி அது மட்டுமே.

வெற்றியும், தோல்வியும்
நாகர்கோவில் செய்தியாளரிடம் பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு எதிர்ப்பே இல்லை என்றார். கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கூறிய போதிலும் வேறு தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்தேன் என்றும் எனது வெற்றியும், தோல்வியும் குமரி மக்கள் கையில் அளித்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?

சாதனைகளைச் சொல்லி வாக்கு
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாஜக அரசு செய்திருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.

2 லட்சம் வாக்குகள்
எங்கள் அணி தான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.

வேலைக்காரன்
பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள், அதை நிச்சயம் நான் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications