தாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்சியில் பங்கேற்ற வசந்தகுமார் எம்பி. மொழி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தபட்ட புதுக்கடையில் அமைக்கப்பட்டு காலம் காலமாக மரியாதை செலுத்தி வந்த போராட்டத்தில் பலியான தியாகிகளின் நினைவு ஸ்தூபியை இடித்து உடைத்த தமிழக அரசு மீண்டும் அதனை அமைத்து தர கோரிக்கை விடுவித்தார், இத் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

கண்னியாகுமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தனமான கேரளாவின் கட்டுபாட்டில் இருந்தது. 1945 க்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைப்பதற்காண போராட்டம் தொடங்கியது. இதில் மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிய பின்னர் போராட்டங்கள் அதிகரித்தது. இதில் கேரளா போலீசார் 1954 ல் புதுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து போராட்டங்கள் தீவீரமடைந்ததை தொடர்ந்து 1956 நவம்பர் 1 ஆம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைந்தது.
இந்த இனைந்த நாளை ஆண்டு தோறும் மொழி போராட்ட தியாகிகளும் பல்வேறு அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தான் இந்த தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து இந்த தியாக நாளுக்கு பெருமை சேர்த்தார். அதுமட்டுமின்றி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமனிக்கு மணி மண்டபம் கட்டிக் கொடுத்து மேலும் பெருமை சேர்த்தார்.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64 ஆவது ஆண்டு தினத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கபட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வசந்தகுமார் எம்பி. - மொழி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தபட்ட புதுக்கடையில் அமைக்கப்பட்டு காலம் காலமாக மரியாதை செலுத்தி வந்த போராட்டத்தில் பலியான தியாகிகளின் நினைவு ஸ்தூபியை இடித்து உடைத்த தமிழக அரசு மீண்டும் அதனை அமைத்து தர கோரிக்கை விடுவித்தார்.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications