பொய்ப் புகார் அளித்து மிரட்டும் பாஜக பிரமுகர்.. தீக்குளிக்க முயன்ற ராணி.. நாகர்கோவிலில் பரபரப்பு
Recommended Video

நாகர்கோவில்: வீடு ஒத்திக்கு வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தங்களை மிரட்டும் மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்மோகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்ற ராணி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் சௌராஷ்டிர தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சோனியா என்ற மகள் உள்ளார். மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம் மோகன் என்பவருக்கு சொந்தமான சௌராஷ்டிர தெருவில் உள்ள வீட்டை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒத்திக்கு எடுத்த ஜான் கென்னடி அதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், ஒத்தி காலக்கெடு முடிந்தும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் வாடகையை மட்டும் ராம் மோகன் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே வீடு பழுதடைந்ததோடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டினுள் ஒரு பாம்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வீடு மாறுவதாக கூறி ராம் மோகனிடம் ஜான் கென்னடி ஒத்திக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் வீடு பழுது நீக்கு செலவிற்கே தாங்கள் கொடுத்த பணம் காணாது என கூறி ஒத்தி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த ராம் மோகன், ஜான் கென்னடி குடும்பத்துடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கோட்டார் காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதனிடையே வீடு ஒத்திக்கு வாங்கிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததோடு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து தங்களை மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம்மோகன் என்பவர் மிரட்டுவதாகவும், அதற்கு காவல் துறையினர் துணை போவதாகவும் கூறி இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராணி மற்றும் அவரது மகள் சோனியா ஆகிய இருவரும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
அப்போது திடீரென கையோடு கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை விட்டு ராணி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள் ராணியிடம் இருந்து கேனை பிடுங்கி அவரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போலீசார் ராணி மற்றும் அவரது மகள் சோனியா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications