திடீரென இறந்த தம்பி.. மார்பில் சாய்ந்து உயிரை விட்ட அக்கா.. ரியல் பாசமலர் சம்பவம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசமலர் சினிமாவை நினைவூட்டும் விதமாக மாரடைப்பால் இறந்த அரசு பள்ளி ஆசிரியரான தம்பியின் மார்பில் சாய்ந்து உயிரை விட்டிருக்கிறார் அக்கா.
ஆசிரியரின் இறுதிசடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள், அவரது அக்காவின் இறுதி சடங்கிலும் பங்கேற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காந்திநகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் இரணியில் மேல்கரை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் வேணுகோபால் திடீரென மயங்கி கீழே விழுந்து, மாரடைப்பால் இறந்தார்.
அப்போது வேணுகோபால் இறந்த செய்தி கேட்டு கண்ணீர் மல்க வந்த தேரூர் பகுதியைச் சேர்ந்த அவரது அக்கா அம்பிகா வேணுகோபால் உடல் அருகே அமர்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

திடீரென இறந்த தம்பியின் மார்பின் மேல் அம்பிகா மயங்கி விழுந்தார். தம்பியின் இறப்பை தாங்கி கொள்ள முடியாமல் பாசக்கார சகோதரி, தம்பியின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications