Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஆன்சர் சொல்லவா?' 10ம் வகுப்பு தேர்வெழுத வந்த மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்! தட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 6ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. ஏற்கனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தராமல் இருந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களையும் வரவழைப்பது என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

Teacher arrested for sexually harassing class 10 student in Kanyakumari

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 3,686 மையங்களில் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டும் 116 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி தக்கலையில் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தக்கலை அருகே உள்ள அரசு உதவிப்பெரும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் தேர்வெழுத 10ம் வகுப்பு மாணவிகள் வந்துள்ளனர். அப்போது தேர்வு அறையின் கண்காணிப்பாளராக அருமணை அருகே உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வேலவன் என்பவர் நியமிக்கப்படடுள்ளார். இவர் தேர்வெழுதிக்கொண்டிருந்த மாணவி அருகே சென்று பேச்சு கொடுத்திருக்கிறார். பின்னர் மாணவியை தொட்டு பேசியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதனையடுத்து தேர்வு முடிந்த பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் இயல்பாக இல்லாததை உணர்ந்த பெற்றோர் அவரிடம் என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளனர். மாணவி அழுதுக்கொண்டே தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் வேலவனிடம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர். பின்னர் கல்வித்துறைக்கும், குழுித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Teacher arrested for sexually harassing class 10 student in Kanyakumari

மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்வெழுத வந்த மாணவியிடம் ஆசிரியரே சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், "மகள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அப்சட்டாக இருந்தார். நாங்கள் விசாரித்தோம். முதலில் அவள் எதையும் எங்களிடம் சொல்லவில்லை. நீண்ட நேரம் கேட்ட பின்னர்தான் விஷயத்தை எங்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து நாங்கள் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேள்வியெழுப்பினோம். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. எனவே நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இனி இதுபோன்று சம்பவம் நடைபெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கன்னியாகுமரியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+