பெற்றோருக்கே முதல் சல்யூட்... நெகிழ வைத்த கன்னியாகுமரி புதிய எஸ்.பியின் செயல்.. சூப்பர் வீடியோ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக பொற்றுப்பேற்றுக் கொண்ட ஹரி கிரண் பிரசாத் முதன் முதலில் தனது தாய்க்கும் தந்தையக்கும் முதல் சல்யூட் அடித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்து இருக்கிறார்.
Recommended Video
கடந்த 23 ஆம் தேதி 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டார். இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹரி கிரண் பிரசாத் புதிய எஸ்.பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தனது தாய் தந்தையருக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் முதல் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். அவரது இந்த செயல் அங்கிருந்த சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் அதிகாரியான ஹரி கிரண் பிரஷாத், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 2018 ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகருக்கு துணை காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று இருக்கிறார் ஹரி கிரண் பிரசாத்.












Click it and Unblock the Notifications