Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2500ல் இருந்து 12500 ஆக மாறி எப்சி கட்டணம்.. நாமக்கல் லாரி உரிமையாளர்களிடம் இருந்து பறந்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், பஸ்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 இருந்ததை ரூ.12 ஆயிரத்து 500, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் என தகுதிசான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று நாமக்கல் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசாமணி, தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக கடந்த 11-ந் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.

FC fee to be increased from 2500 to 12500 Namakkal lorry owners request the government

இது சம்பந்தமாக ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் (எப்.சி.) பெற கட்டணமாக ரூ.600 உள்ளதை தற்போது ரூ.1,000-ஆக உயர்த்தியும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் பெற கட்டணமாக ரூ.600 உள்ளதை தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியானது.

15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், பஸ்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 இருந்ததை ரூ.12 ஆயிரத்து 500, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் என தகுதிசான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள வாகன தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை கடந்த 17-ந் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அழிந்து வரும் மோட்டார் தொழிலை பாதுகாத்திடவும், பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கோடிக்கணக்கான இருசக்கர, மூன்று மற்றும் இலகுரக சக்கர வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு அறிவித்துள்ள தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் பேசி பழைய கட்டணத்தையே வசூலிக்க, தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு அதில் செல்லராசாமணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் (சிம்டா) ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், "லாரிகளுக்கான தகுதிச்சான்று கட்டணம் தற்போது ரூ.850 ஆக உள்ளது. வாகனத்தின் பயன்பாட்டு காலத்தை கணக்கிட்டு இந்த கட்டணத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. அதன்படி 10 ஆண்டுகள் கடந்த லாரிகளுக்கு ரூ.12,500 தகுதிச்சான்று கட்டணமாகவும், 30 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.33 ஆயிரம் தகுதிச்சான்று கட்டணமாகவும் மத்திய அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநில அரசுகள் பின்பற்றலாம். அல்லது இதனை தவிர்க்கலாம்.

அதன்படி கேரளா மாநிலத்தில் தகுதிச்சான்று கட்டண நடைமுறையை ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில அரசு இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இந்த மாநிலங்களை போன்று தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தகுதிச்சான்று கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தகுதிச்சான்று கட்டணத்தை அரசு உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு உள்பட தென்மாநில அரசுகள் தகுதிச்சான்று கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற 9-ந்தேதி முதல் தென் மாநிலங்களில் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+