பற்றி எரியும் காட்டுத்தீ! கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல தடை
நாமக்கல்: கொல்லிமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்ததில் இருந்தே மேகமலை, தேவாரம், கொடைக்கானல் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதேபோல் கர்நாடகா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சில வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ பெரிய அளவில் ஏற்பட்டது. இதேபோல் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான ஏற்காடு பகுதியிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதிய மழை இல்லாமல் கோடை வெயில் சுட்டெரித்ததன் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது.
பெர்சமின் வாங்காம டிவியில பேசிட்டாரு பிரதமர் மோடி.. ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம்
இந்நிலையில் மற்றொரு கிழக்கு தொடர்ச்சி மலையான கொல்லிமலையில் இன்று காலை திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் மளமளவென காட்டுத்தீ பரவிவருதவால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றம் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொல்லிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.