என்கவுண்டர் செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையன் ஜுமானுதீன் உடலில் இருந்த 2 குண்டுகள்! பிரேத பரிசோதனை நிறைவு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்துவிட்டு தப்பியபோது, நாமக்கல் அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மேவாட் கொள்ளையன் ஜூமானுதீனின் உடற்கூராய்வு இன்று நீதிபதி, வட்டாட்சியர் முன்னிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. கொள்ளையனின் உடலில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிய கொள்ளை கும்பலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். வெப்படை காட்டுப் பகுதியில் தப்ப முயன்ற கொள்ளையர்களில் ஒருவனை தமிழக போலீசார் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமானுதின் பலியாக, அசீர் அலி என்பவரை குண்டு காயத்துடன் போலீசார் பிடித்தனர்.

crime police

கொள்ளையர்கள் கைது: மற்ற 5 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர். கன்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது, உள்ளே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும், ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்ட 66 லட்சம் ரூபாய் இருப்பதையும் கண்டு அவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.

பிடிபட்ட மேவாட் கொள்ளையர்களிடம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜூமானுதீனுக்கு உடற்கூராய்வு இன்று நடந்தது.

கொள்ளையன் உடலில் 2 குண்டுகள்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொள்ளையன் ஜூமானுதீனின் உடற்கூராய்வு குமாரபாளையம் குற்றவியல் நடுவர் மாலதி, வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கொள்ளையன் ஜூமானுதீன் உடலில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.

போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜுமானுதீன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், கொள்ளையன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஏடிஎம் கொள்ளை: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர். குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர்.

மடக்கிப் பிடித்தது எப்படி?: இதையடுத்து நாமக்கல் போலீசார் சேசிங் செய்து அதிவேகத்தில் சென்ற கண்டெய்னரை மடக்கி கொள்ளையர்களைப் பிடித்தனர். 4 பேரை கைது செய்த போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். ஒரு கொள்ளையனை கண்டெய்னர் லாரியில் ஒரு போலீஸ்காரரோடு வரச் செய்து முன்னும் பின்னும் போலீசார் சென்றனர்.

என்கவுண்டர் நடந்தது எப்படி?: காவல் நிலையம் செல்லும் வழியில், கண்டெய்னருக்கு உள்ளிருந்து சத்தம் வந்ததால் கண்டெய்னர் லாரியை நிறுத்தி கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, போலீசாரை கொள்ளையன் ஜூமாதின் தாக்கிவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவரை சுட்டதில் ஜூமாதின் இறந்தார். ஒரு ஆயுதத்தால் எஸ்.ஐ-யை தாக்க முற்பட்டபோது இன்ஸ்பெக்டர் சுட்டதில் இறந்தார் ஜூமாதீன். மற்றொரு கொள்ளையன் அஸ்ரு அலிக்கு காலில் குண்டு பாய்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+