நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயலுக்கு நீர் பாய்ச்சிய கணவன்: மனைவியை சீரழித்த உள்ளூர்க்காரன்

By Siva
Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் கணவன் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். அவரது மனைவி செல்லம்மாள்(55). இருவரும் விவசாய கூலித் தொழிலாளிகள். கடந்த மாதம் 6ம் தேதி அவர்கள் இருவரும் தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இரவில் குருநாதன் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது செல்லம்மாள் அருகில் உள்ள மோட்டார் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். தூங்கிக் கொண்டிருந்த செல்லம்மாளை அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்திலை கைது செய்தனர்.

இதையடுத்து செல்லம்மாள் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பாலியல் பலாத்காரம் செய்த செந்திலை போலீஸார் கைது செய்ததோடு விட்டுவிட்டனர். மேற்கொண்டு யாரிடமும், எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. இதனால் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட எனக்கு நிவாரணம் வழங்குவதோடு, உயர்மட்ட விசாரணை செய்து, காமக்கொடூரன் செந்திலுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

English summary
A 55-year old woman was raped by a man while her husband was busy working in the nearby paddy field in Namakkal district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X