புரட்டி போட்ட புயல்! கிழித்தெறிந்த சூறாவளி.. தொடரும் உயிரிழப்புகள்! அவசரநிலையை அறிவித்த அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் கடுமையான புயல் வீசும் என்று அந்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி ஆகிய மாகாணங்களில் சுமார் 60 சூறாவளி உருவாகியுள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் என அனைத்தும் சரிந்து விழுந்துள்ளன. இதில் கொடுமை என்னவெனில் வடக்கு இல்லினாய்ஸில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சுமார் 260 பேர் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி தாக்கியதில் தியேட்டர் இடிந்து விழுந்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். 28க்கும் அதிமானவர்க்ள படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கிழக்கு ஷெர்மன் பகுதியில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் பேர் உயிரிழந்தனர். ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், இந்தியானா மற்றும் டென்னசி தவிர மற்ற பகுதிகளில் சூறாவளி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நான் இந்த பகுதியில் 1985ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் இந்த சூறாவளியானது இந்த பகுதியை அடையாளம் தெரியாத பகுதியாக புரட்டி போட்டிருக்கிறது. சூறாவளியின் தாக்கத்திற்கு பின்னர் நான் எங்கு இருக்கிறேன் என்பதையே என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம்தான் கடும் மழை காரணமாக பழமையான சுவர் இடிந்து விழுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியிருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர் புயல் பாதிப்பு காரணமாக ஆர்கன்சாஸ் பகுதியில் அவசர நிலையை ஆளுநர் அறிவித்துள்ளார். இதனையடுத்து மிசோரியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே மக்கள் கவலையடைய வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications