செர்பியாவில் மோதிய குட்டி சைஸ் விண்கல்.. நாசா எச்சரிக்கை அப்படியே பலித்தது!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை செர்பியாவுக்கு அருகே சிறிய விண்கல் ஒன்று விழுந்து வெடித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து ஏற்கெனவே நாசா எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய உலகம், நம்மை சுற்றியுள்ள சந்திரன், மற்ற அனைத்து கோள்களுமே விண்கற்களால் உருவாக்கப்பட்டதுதான். இப்படி எல்லாவற்றையும் உருவாக்கிய விண்கற்கள்தான், எல்லாவற்றையும் அழிக்கவும் செய்யும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை ஒரு பெரிய சைஸ் விண்கல் ஒன்று தாக்கியது. இந்த தாக்குதல் காரணமாக டைனோசர் அழிந்துவிட்டது. விண்கல் தாக்கியதால் சுனாமி, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

asteroid nasa

மிக குறிப்பாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் ஏற்பட்டது. இது நமது பூமியின் வளிமண்டலத்தை முழுவதுமாக போர்த்திவிட்டது. எனவே சூரிய ஒளி உள்ளே வரவில்லை. அதேபோல, மறுபுறம் பூமியை சூழ்ந்த எரிமலை வெடிப்பு புகை மற்றும் காட்டுத்தீ புகை வெளியேயும் செல்லவில்லை. இப்படியாக சில பத்தாண்டுகள் வரை நடந்தன. இறுதியில் டைனோசர் போன்ற பெரிய நுரையீரல் கொண்ட உயிரினங்கள் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டன. இந்த அழிவு ஒன்றே, விண்கல் எந்த அளவுக்கு கொடூரமானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

இந்த விஷயம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போது தொடங்கி, இப்போது வரை விண்கற்களை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். பூமிக்கு நெருக்கமாக எந்தெந்த விண்கற்கள் வருகின்றன. அவை பூமியை மோத வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருக்கிறது எனில், அதை தடுக்க என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசா இந்த ஆய்வுகளை தீவிரமாக நடத்தி வருகிறது.

இப்படி இருக்கையில் நேற்று நள்ளிரவில் 70 செ.மீ அளவு மட்டுமே கொண்ட சிறிய விண்கல் ஒன்றை நாசா கண்டுபிடித்தது. இது பூமிக்கு மிக அருகில் வந்திருக்கிறது என்றும், சில மணி நேரங்களில் பூமியை தாக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால் சைஸ் சிறியது என்பதால் பாதிப்பு ஏற்பாடு என்றும் கூறியிருந்தது. நாசா கணித்தபடியே நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் செர்பியா நாட்டுக்கு அருகில் இந்த விண்கல் விழுந்தது. 'C0WEPC5' என்று இந்த விண்கல்லுக்கு பெயர் வைத்துள்ளனர்.

நாசா கணித்தபடி சிறிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் கலந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+