சீனா அத்துமீறுகிறது.. அமெரிக்கா உடனே இந்தியாவிற்கு உதவ வேண்டும்.. அமெரிக்க சென்ட் சபையில் தீர்மானம்!
நியூயார்க்: இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது, இந்தியாவிற்கு அமெரிக்கா எப்போதும் உதவி கரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையிலான மோதல் தொடங்கிய சமயத்தில் இருந்தே இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்தது. இந்தியாவிற்கு எப்போதும் அமெரிக்கா உதவி செய்யும். இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்பவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.
சீனாவுடன் இருக்கும் மோதல் காரணமாக அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கியது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூட நேரடியாக இந்தியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார்.

யார் கொண்டு வந்தது
இந்த நிலையில் இந்திய எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது, இந்தியாவிற்கு அமெரிக்கா எப்போதும் உதவி கரம் நீட்ட வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சி செனட்டர் ஜான் காரனின் மற்றும் செனட்டர் மார்க் வார்னர் ஆகிய இருவரும் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். சீனா தேவையில்லாமல் எல்லையில் அத்துமீறுகிறது என்று இவர்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

எல்லையில் அத்துமீறல்
எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவின் செயலை அமெரிக்கா பாராட்டுகிறது. சீனா இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அமெரிக்கா இதில் தலையிட்டு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தியாவிற்கு முன்பை விட இப்போதுதான் அமெரிக்காவின் உதவி அதிகம் தேவை.

ஜூலை மாதம்
ஜூலை 15ம் தேதி இந்தியா சீனா இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போதே சீன ராணுவம் குறித்தும், அரசு குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சீனா அண்டை நாடுகளில் அத்துமீற நினைக்கிறது. இதனால் தற்போது சீனாவிற்கு எதிராகவும், சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் இப்போது தீர்மானம் கொண்டு வருகிறோம், என்று இரண்டு செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள்தான் தொடங்கினார்கள்
இவர்கள் இருவரும்தான் அமெரிக்காவில் செனட் சபையில் செனட் இந்தியா கேகஸ் (Senate India Caucus) அமைப்பை உருவாக்கியது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவு குறித்து கருத்து கூறுவது, தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பான அமைப்பு ஆகும் இது. இவர்கள் இருவரும்தான் தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர் .
-
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications