கனடா விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.. ஒரே போடாக போட்ட வெள்ளை மாளிகை.. இந்தியாவிற்கு நெருக்கடி.. ட்விஸ்ட்
நியூயார்க்: கனடா நடத்தும் காலிஸ்தானி தலைவர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், இந்த கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்தியா - கனடா மோதல் எதிர்பார்க்காத அளவிற்கு உச்சம் பெற்றுள்ளது. இரண்டு நாட்டு அரசுகளும் எதிர் நாட்டின் தூதரகத்தை சேர்ந்த சீனியர் நிர்வாகி ஒருவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியே அனுப்பி உள்ளது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.

இந்த புகார்தான் இரண்டு நாட்டு மோதலுக்கு முக்கிய காரணம் ஆகும். இதில் உடனடியாக சமாதானம் ஏற்படும் அறிகுறிகள் தெரியவில்லை.
சமாதானம் ஏற்படாத பட்சத்தில் இரண்டு நாட்டு உறவு முறியும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடாவில் இருக்கும் லட்சோப லட்சம் பேர் பாதிக்கப்படலாம். அதோடு கனடாவுடன் மோதலால் கனடாவிற்கு நெருக்கமான அமெரிக்கா,ஆஸ்திரேலியா , பிரான்ஸ், யுகே என்று மேற்குலக நாடுகளின் உறவும் முறியும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவை ஏற்கனவே உக்ரைன் போரில் முறைத்தது கனடா. இந்த முறை நேரடியாக இந்தியாவின் மீது கொலை குற்றமே சுமத்தப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு பிரஷர் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கனடா பிரதமர் ட்ரூடோ, காலிஸ்தானி சார்பு தலைவர் நிஜார் கொலையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரிடம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.
ஜோ பிடன் உடன் இவர் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியா - கனடா மோதல் விவகாரத்தில் தற்போது அமெரிக்கா மூக்கை நுழைத்து உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பிரஷர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறுகையில், "பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். கனடா அரசுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கனடாவின் விசாரணை தொடர வேண்டும் .குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது முக்கியமானது. அதனால் நாங்கள் விசாரணையை ஆதரிக்கிறோம் என்று வெள்ளை மாளிகை இந்தியாவிற்கு எதிரான தொனியில் பேசி உள்ளது.
அதோடு இன்று வெளியிட்ட அறிக்கையில், கனடா நடத்தும் காலிஸ்தானி தலைவர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், இந்த கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பயங்கரவாதி கொலையில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை "ஆழ்ந்த கவலையில் உள்ளது" என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்து உள்ளார். இதில் உண்மைகளை கொண்டு வர இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பரபரப்பு புகார்: கனடா பிரதமர் ட்ரூடோ, வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications