மூளைக்குள் பொருத்தப்பட்ட சிப்.. வேலையை காட்ட தொடங்கிய எலான் மஸ்க்! நியூராலிங்கின் முதல் வெற்றி
நியூயார்க்: பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களின் மூளைக்குள் 'சிப்' பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பிலிருந்து மீட்க எலான் மஸ்க் நியுராலிங்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நியூராலிங்க் என்றால் என்ன?: ஏஎல்எஸ் அல்லது கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன் மூலம் அவர்களது எண்ணத்தின் அடிப்படையில் கணினியின் கர்சர் மற்றும் கீபோர்டு கட்டுப்படுத்தப்படும். சுமார் ஆறு ஆண்டு காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போதே சோதனைகள் வெற்றிகரமாக நடந்தாலும் கூட இதுபோன்ற ஒரு 'சிப்' சந்தைக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும்.

முதல்கட்ட சோதனை: இந்த ஆய்வுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசிடமிருந்து எலான் மஸ்க் அனுமதி பெற்றிருந்தார். எனவே பக்கவாதம் பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சிப் முதன் முதலில் வெற்றிகரமாக மனிதருக்கு பொருத்தப்பட்டது என்றும், அவர் தற்போது குணமடைந்து வருகிறார் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த சோதனை இறுதியானது அல்ல. இது ஓரு ஆரம்பக்கட்ட சோதனை மட்டுமே. இருப்பினும் இது வெற்றி பெற்றிருக்கிறது.
இதனை எலான் மஸ்க் x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை கொண்டு இந்த சோதனையை மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக முதல் முதலாக மனிதர்களை இதில் பயன்படுத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த முதல்கட்ட வெற்றி என்பது மனித குலத்திற்கு மிகப்பெரிய வரமாக அமையும் என அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிப் பொருத்துவதன் மூலம் அவர்களால் எழுந்து நடக்க முடியும். மட்டுமல்லாது மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பயன்படுத்தி அவர்களால் கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications