அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 130 பேர் கைது... போலி விசா மூலம் படிக்க சென்றனர்
நியூயார்க்: அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 130 பேர், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதில், குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் படிக்க, போலி விசாவில் மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

600 மாணவர்கள் பதிவு
அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் பல்கலைக் கழகம் என்ற பெயரில் போலி பல்கலைக் கழகத்தை போலீசார் ரகசியமாக உருவாக்கினர். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்காக விளம்பரம் செய்யப்பட்டது. அதில், சேர 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

ஏஜெண்டுகள்
இதற்காக அமெரிக்காவில் வசிக்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஏஜெண்டுகள் அணுகி போலி விசா பெற்று மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

ரூ. 6 லட்சம் வசூல்
பல்கலைக் கழகத்தில் பயிற்றுவதாகக் கூறி, 5 ஆயிரம் டாலரில் இருந்து 20 ஆயிரம் டாலர் வரை ( ரூ. 6 லட்சம் வரை ) கமிஷன் வாங்கிக் கொண்டு எப்1 என்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி விசா பெற்றதை அமெரிக்க போலீசார் கண்டறிந்தனர்.

மாணவர்கள் கைது
படித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் பகுதி நேரமாக பணியாற்றி வந்த 100 மாணவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், போலி விசா கொடுத்து ஏமாற்றிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலி விசாவில் அமெரிக்காவில்மற்ற மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெற்றோர் வேதனை
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மத்திய அரசிடம் முறையிட்டு மாணவர்களை காப்பாற்றும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications