தொடர்ந்து அசத்தும் முகேஷ்.. 6.5 ஆயிரம் கோடி.. ஜியோவின் 1.34% பங்கை வாங்கிய ஜெனரல் அட்லாண்டிக்
ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
நியூயார்க்: ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது .
உலகம் முழுக்க பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக நிறைய முதலீடுகளை பெற்று வருகிறது.

ஜியோ முதலீடு
இந்த நிலையில் வரிசையாக ஜியோ நிறுவனத்தில் பல்வேறு அமெரிக்கா நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகிறது. பல்வேறு கோடிகளுக்கு தொடர்ந்து ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ரிலையன்ஸ் ஜியோவின் 1.34% பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்தில் செய்யப்படும் நான்காவது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனம்
ஜியோவின் பங்குகளை 6598.38 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு பங்கு மதிப்பு 4.91 கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கி உள்ளது. இதன் நிறுவன மதிப்பு தற்போது 5.16 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில் உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது. 43,574 கோடி ரூபாயை பேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்துள்ளது .

மூன்றாவது முதலீடு இது
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவில் செய்யப்பட்ட மிக முக்கியமான முதலீடு ஆகும். இந்தியாவில் ஆன்லைன் மார்கெட்டிங்கில் களமிறங்க வேண்டும் என்று பேஸ்புக் பல வருடமாக திட்டமிட்டு வந்தது. தற்போது அது நிறைவேறி உள்ளது. இதனால் பேஸ்புக் - ஜியோ ஒன்றாக இணைந்துள்ளது.

தொடரும் முதலீடு
அதன்பின் அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் பங்குகளை 5655 கோடிக்கு வாங்கியது. ஜியோவின் 1.5% பங்குகளை அந்த நிறுவனம் வாங்கியது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோவின் பங்குகளை 11637 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நான்கு நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 67,194.75 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications