யோகா உலகை இணைக்கிறது.. அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ மெசேஜ்!
நியூயார்க்: அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். நியூயார்க் சென்றடைந்த அவர் தொழில் அதிபர்கள், நோபல் பரிசு வென்றவர்கள், பல்வேறு துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முன்னணி நிறுவன சிஇஓ-க்கள் போன்றோரை சந்தித்தார். இன்று பிரதமர் மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில் நடக்கும் யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ஐ.நா. சபை தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை அவர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். யோகா பயிற்சியும் மேற்கொள்கிறார். சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமையேற்பது இதுவே முதல்முறை.
ஐ.நா சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் இன்று காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறுகிறது. இதில், ஐ.நாவின் உயர்நிலை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், யோகா தினத்தையொட்டி அமெரிக்காவில் இருந்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார் இந்திய பிரதமர் மோடி. அந்த வீடியோவில், "சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகா உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. யோகா உலகை இணைக்கிறது. யோகா மூலம் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரே குடும்பம்) என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் யோகா செய்கிறார்கள்.

யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல், மூளை, ஆன்மாவை அமைதி படுத்தலாம். அவசர அவசரமாக பணிக்கு சென்றாலும் அவசியம் நாள்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, அது பெரும்பான்மையான நாடுகளால் ஆதரிக்கப்பட்டது" என மோடி கூறியுள்ளார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications