திடீர் திடீர்னு வந்த சூறாவளி..ஒரே நாளில் 6 மாகாணங்களில் வீசிய கடும்புயல்..அமெரிக்காவில் 110 பேர் பலி
அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 110 பேர் உயிரிழந்துள்ளனர்
நியூயார்க்: அமெரிக்காவை தாக்கிய புயலால் ஒரே மாகாணங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல்கள், சூறாவளிகள் அடிக்கடி வீசியும் தாக்கியும் வருகின்றன.. பருவநிலை மாற்றம் காரணமாக இத்தகைய இயற்கை சீற்றம் அங்கு காணப்படுகிறது.
இதன்காரணமாக, அதிகளவு உயிர் சேதத்தையும், பொருட்சேதங்களையும் அவை ஏற்படுத்தி வருகின்றன.. நேற்று முன்தினம் ஒரே இரவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த சூறாவளிகள் அமெரிக்காவின் 6 மாகாணங்களை தாக்கின..

6 மாகாணங்கள்
இந்த 6 மாகாணங்களுமே உருக்குலைந்துவிட்டன... அளவுக்கு அதிகமான சேதம் ஏற்பட்டது.. அதாவது தெற்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, இல்லினாய்ஸ், டென்னிசி, ஆர்கன்சாஸ், மிசூரி மற்றும் மிசிசிப்பி ஆகிய 6 மாகாணங்களை நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை அடுத்தடுத்து சூறாவளிகள் வீசியுள்ளன.. கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் 6 மாகாணங்களை தாக்கின.. இதனால், வரலாறு காணாத பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது..

ஃபேக்டரிகள்
குறிப்பாக கென்டக்கி மாகாணம் உருத்தெறியாமல் சிதைந்துவிட்டது.. இங்கு மணிக்கு 361 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்ததாக கூறப்படுகிறது... இதனா, அங்குள்ள மெழுகுவர்த்தி ஃபேக்டரி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.. அளவுக்கு அதிகமான உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.. எப்படியும் இந்த மாகாணத்தில் மட்டும் 50-க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருததப்பட்ட நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் சூறாவளியால் உயிரிழந்துள்ளனர்

இரங்கல்
அதே போல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் ஃபேக்டரி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்... உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ், நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார்... இதுதவிர டென்னிசி மாகாணத்தில் 4 பேர், ஆர்கன்சாஸ் மற்றும் மிசூரி மாகாணங்களில் தலா 2 பேர் இந்த கடுமையான சூறாவளிக்கு பலியாகினர்... அமெரிக்க மாகாணங்களை தாக்கிய இந்த சூறாவளிக்கு இதுவரை 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்கிறார்கள்.. இதைதவிர, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்..

உயிர்பலி
அந்தந்த மாகாணங்களில் உள்ள ஃபேக்டரிகள் இடிந்து விழுந்ததால், அந்த இடிபாடுகளிலும் பலர் சிக்கி உள்ளனர்.. அவர்களையும் மீட்கும்பணி தொடர்ந்து நடக்கிறது.. இதனால் உயிர் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அதிபர் ஜோ பிடன் உறுதி தந்துள்ளார்.. சூறாவளியால் மோசமாக பாதிக்கப்பட்ட கென்டக்கி மாகாணத்தில் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications